துபாயில் புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கு.. திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி..

துபாயில் புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கை புதுச்சேரி முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2023-05-03 01:15 GMT

துபாயில் இருக்கும் கண்காட்சி மையத்தில் தற்போது புதுச்சேரி சுற்றுலாக் கண்காட்சி அரங்கை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து இருக்கிறார். அரேபியன் பயணச்சந்தையில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி அரங்கை முதல்வர் ரங்கசாமி இணையம் வாயிலாக தொடங்கி வைத்தார்.


துபாயில் புதுச்சேரி சுற்றுலா கண்காட்சி ஆண்டுதோறும் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த சர்வதேச சுற்றுலா பயணக்கண்காட்சியாக அரேபிய பயணச்சந்தை (Arabian Travel Mart ) விளங்குகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரங்குகள் மற்றும் மாநாடு கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. இதில் கண்காட்சி அரங்குகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடங்களை உள்ளடக்கிய தளமாக துபாய் உலக வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது.


பல்வேறு தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், சுற்றுலா பயண அமைப்பாளர்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் தங்களுடைய கடற்கரை ஹோட்டல்கள், சுற்றுலா தொழில் சேவைகளை உள்ளடக்கிய அமைப்புகள் அவற்றை சந்தைப்படுத்துவதற்காக அரேபியன் பயணச்சந்தையில் பங்கேற்கிறார்கள். நிலையான சுற்றுலா வளர்ச்சி, மருத்துவச்சுற்றுலா மற்றும் சுற்றுலா பயணத்தொழிலில் உள்ள புதிய பரிமாணங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதே இப்பயணச்சந்தையின் நோக்கமாகும்.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News