உக்ரைனில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விவரங்களை தெரிவிக்க உதவி மைய எண்!

Update: 2022-02-26 07:48 GMT

உக்ரைன் நாட்டில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விவரங்களை தெரிவிக்க உதவி மைய எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சம்பவத்தால் தற்போது உக்ரைனில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. எனவே புதுச்சேரியில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உக்ரைனில் வசித்து வருகின்றனர்.

தற்போது உக்ரைனில் இருந்து புதுச்சேரிக்கு வர முடியாமல் தவித்து வரும் உறவினர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதாவது உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை உடனடியாக இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

மேலும், உக்ரைனில் உள்ள புதுவை மக்களின் விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. அவர்களின் விவரங்களை தெரிவிப்பதற்கு கட்டணம் மற்றும் கட்டணம் இல்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி 1070, 1077, 04132253407 மற்றும் 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அதே போன்று காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் 1077, 1070, 04368228801 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News