அரசு ஊழியர்கள் ஜூலை 1க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு.!
தடுப்பூசி திருவிழா 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ம் தேதிக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் ஜூலை 1ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மருத்துவனைகளிலும் உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் அதிகளவு தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி திருவிழா 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ம் தேதிக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.