காரைக்காலில் பசுமை விமான நிலையம் அமைக்க எம்.பி. வைத்திலிங்கம் வலியுறுத்தல்!

Update: 2022-03-24 12:48 GMT

காரைக்காலில் பசுமை விமான நிலையமும், புதுவையில் இரவு நேரங்களில் விமானம் தரையிறங்கும் வசதியும் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விமான போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் பேசியதாவது: மீண்டும் புதுவைக்கு விமான போக்குவரத்தை வருகின்ற மார்ச் 27ம் தேதி தொடங்க இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், புதுச்சேரி அரசு விமான நிலையத்துக்கு மாநியத்தில் மின்சாரம் வழங்கி வருகிறது. பாதுகாப்பு வசதிகளையும் செய்துள்ளது.

மேலும், காரைக்காலில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. அங்கு பசுமை விமான நிலையத்தை நிறுவன ஒரு தனியார் நிறுவனம் ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் காரைக்காலில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News