மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

Update: 2022-02-20 09:42 GMT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்று (பிப்ரவரி 19) தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்த நிலையில் மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார்.

இதன் பின்னர் புதுச்சேரி, கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்ந நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் புதுச்சேரி நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் இரவு கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தலைமை நீதிபதி வருகையை முன்னிட்டு கடற்கரை சாலையில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றும் (பிப்ரவரி 20) பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News