புதுவை அண்ணாநகரில் செயற்கை பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

Update: 2022-03-13 07:06 GMT

புதுச்சேரி அண்ணா நகரில் ராட்சத இயந்திரங்கள் மூலமாக பாலம் அமைக்கின்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

புதுவை இந்திராகாந்தி சிலை சதுக்க பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்கின்ற நோக்கத்தில் அண்ணாநகர் பகுதியில் புதுச்சேரி மற்றும் வில்லியனூர் சாலையின் குறுக்கே செயற்கை முறையில் பாலம் அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி செயற்கை பாலம் அமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த 9ம் தேதி இரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அப்பகுதியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு செயற்கை கான் கிரீட் பாலத்துக்கான கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பழைய வாய்க்காலில் உள்ள பழைய கட்டமைப்புகளை அகற்றி வருகின்றனர். விரைவில் பணி முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News