காரைக்கால் மக்களை பயமுறுத்திய பயங்கர சத்தம்.!
சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயங்கர வெடிச்சத்தத்துடன் நிலஅதிர்வு காரைக்கால் பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடிரென்று பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயங்கர வெடிச்சத்தத்துடன் நிலஅதிர்வு காரைக்கால் பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை பகுதியில் நில அதிர்வு தொடர்பாக வட்டாட்சியர் பிரான்சுவா நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர் பேசியதாவது: ராணுவ பயிற்சி விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும் போது இது போன்ற சத்தம் ஏற்படுவது வழக்கம் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.