லாரி மோதியதில் சாலையில் இருந்த பெரியார் சிலை சாய்ந்தது!

Update: 2022-01-20 06:15 GMT

புதுச்சேரியிலிருந்து புனே சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் பெரியார் சிலை கீழே சாய்ந்துள்ளது.

சாலையில் வைக்கப்படும் சிலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம். எனவே பல இடங்களில் கடந்தகால ஆட்சியாளர்கள் குறுகிலான சாலையோ, அல்லது நெருக்கடியான இடங்களில் கூட சிலைகளை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து புனே நோக்கி சென்ற லாரி ஒன்று, நள்ளிரவு நேரத்தில விழுப்புரம், காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது மோதியுள்ளது. இதன் காரணமாக பெரியார் சிலை கீழே விழுந்தது. இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source, Image Courtesy: Webdunia

Tags:    

Similar News