புதுவை சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

Update: 2022-02-28 12:53 GMT

புதுச்சேரியில் நாளை சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை தொடர்ந்து இரவு முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மாதம், மாதம் சிவராத்திரி வருகை தந்தாலும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வருகின்ற சிவராத்திரியே மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை (மார்ச் 1) செவ்வாய்கிழமை புதுச்சேரியில் உள்ள சிவன் கோயில்களில் வெகு விமர்சையாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.

அதன்படி புதுவையில் உள்ள காந்திவீதி வேதபுரீஸ்வரர் கோயில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில், பாரதி வீதி காமாட்சி அம்மன் கோயில், மற்றும் வில்லியனூர் திருக்காமீஸ்வரர், பாகூர் மூலநாதர், முதலியார்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோயில், காராமணிக்குப்பம் சிவசுப்பிரமணிய கோயில் உட்பட கிராமப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சிவனை வழிப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News