ஆளுநர் தமிழிசையுடன் அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தது ஏன்?

புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 7500க்கும் மேற்பட்டோர்கள் நாடு முழுவதிலும் இருந்து புதுச்சேரிக்கு வருகைதர உள்ளனர்.

Update: 2021-12-21 02:57 GMT

புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 7500க்கும் மேற்பட்டோர்கள் நாடு முழுவதிலும் இருந்து புதுச்சேரிக்கு வருகைதர உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக டிசம்பர் 24ம் தேதி மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புதுச்சேரிக்கு வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஜனவரி 12ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுவை தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைக்கலாம் என்று பாஜக சார்பாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 20) மாலை அமைச்சர் நமச்சிவாயம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது தேசிய இளைஞர் தின விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News