மீனவ மக்கள் குடும்பங்களுக்கு தல ₹.2500: மழைக்கால நிவாரணத்தை அறிவித்த புதுச்சேரி முதலமைச்சர்!

மீனவ குடும்பங்களுக்கு தலா 2500 மழைக்கால நிவாரண தொகையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் வழங்கினார்.

Update: 2022-11-23 07:27 GMT

மீனவ குடும்பங்களுக்கு தல 2500 மழைக்கால நிவாரணத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் வழங்கியிருக்கிறார். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் மீனவ குடும்பங்களுக்கு தற்பொழுது தல 2,500 நிவாரணமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் முதற்கட்ட நிவாரணமாக 1783 மீனவ குடும்பங்களுக்கு 4 கோடியை 49 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடைபெற்று விட்டு நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகுமார், மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் சிகாமணி மற்றும் அதிகாரிகள் மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இத்தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500 மழைக்கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News