அடுத்தவரை குறை சொல்லியே காலத்தை ஓட்டும் நாராயணசாமி: அமைச்சர் நமச்சிவாயம் விமர்சனம்!

அடுத்தவர்களை குறை சொல்லியே தனது அரசியல் காலத்தை கழிக்கிறார் என்று புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாராயணசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-01-02 12:51 GMT

அடுத்தவர்களை குறை சொல்லியே தனது அரசியல் காலத்தை கழிக்கிறார் என்று புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாராயணசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நமச்சிவாயம் கூறியதாவது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அடுத்தவர்களை குறை சொல்லியே தனது அரசியல் காலத்தை கழிக்கிறார். இதுவரை ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் செய்யவில்லை. அவர் முதலமைச்சராக இருக்கும் காலத்திலும், ஆளுநர்கள் மற்றவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

தற்போது ஆட்சியில் இல்லாததால், எதாவது குறையை சொல்லித்தான் அரசியல் நடத்தும் நிலைக்கு நாராயணசாமி தள்ளப்பட்டுள்ளார். தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகிறார். அது போன்று எந்த ஒரு நிகழ்வும் தற்போதைய ஆட்சியில் நடைபெறவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியவர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணம் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்று உள்நோக்கத்துடன் நாராயணசாமி குற்றம்சாட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Hindu Tamil

Image Courtesy: Vikatan

Tags:    

Similar News