உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறதா தேசிய ஜனநாயக கூட்டணி? பாஜக மேலிட பார்வையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்று பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளார்.

Update: 2021-09-23 10:06 GMT

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்று பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளரும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான நிர்மல்குமார் சுரானா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்டு, வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, மேலவை எம்.பி., வேட்பாளர் செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் பாஜக முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறது. முறைப்படி தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை நடத்திய பின்னரே வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dailythanthi

Tags:    

Similar News