தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி: புதுச்சேரி சுகாதாரத்துறை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது ஒமைக்ரான் வைரஸாக மாறி இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.;

Update: 2021-12-29 03:26 GMT
தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி: புதுச்சேரி சுகாதாரத்துறை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது ஒமைக்ரான் வைரஸாக மாறி இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் ஒமைக்ரான் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதி இரவு கலந்து கொள்பவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், மால்களில் அனுமதிக்க வேண்டும். தற்போது பாண்டிச்சேரியில் 8.24 லட்சம் முதல் டோஸ் தடுப்பூசியும், 5.40 லட்சம் 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடி அறிவித்தது போன்று ஜனவரி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News