சுற்றுலா பயணிகளுக்கான புதிய செயலி.. புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிமுகம்..

Update: 2023-10-16 02:40 GMT

புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஒரு உகந்த இடமாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் புதிய செயலி புதுச்சேரி போக்குவரத்து புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவின் கிழக்கு, வடக்குக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். குறிப்பாக புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது பற்றி தெரிவிப்பதற்காக பல்வேறு கருத்துக்களையும் முன் வைத்தார்.


இதனால், போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்த இடமின்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிா்க்கும் வகையில் உள்துறை அமைச்சா், சுற்றுலாத்துறை அமைச்சா் ஆகியோரிடம் காவல்துறை சாா்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சா்களின் அறிவுறுத்தல்படி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உதவும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


காரில் வருவோா் புதுச்சேரி சுற்றுலாத் துறை இணையம், போக்குவரத்து பிரிவு இணையம் மற்றும் கட்செவியஞ்சலில் அச்செயலியை பதிவிறக்கம் செய்தால், வாகன நிறுத்துமிடத்தை தெரிந்து பயன் பெறலாம். புதுச்சேரி பழைய துறைமுகப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டு, வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News