எதுனாலும் பேசலாம், பெட்ரோல் குண்டு போட்டுறாதீங்க.. நகைச் சுவையாக பேசிய ஆளுநர் தமிழிசை..

Update: 2023-11-03 03:05 GMT

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயமான நாளான நேற்று முன்தினம் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு இருந்தார். குறிப்பாக ஜம்மு அண்ட் காஷ்மீர் உதயமான தினத்தை முன்னிட்டு அங்கு இருக்கும் கலைஞர்களுடன் சேர்ந்து காஷ்மீரின் பாரம்பரிய நடனத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் நடனம் ஆடினார். பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் கவர்னர் கலந்து கொண்டு பேசினார்.


புதுச்சேரி அலுவலகத்தில் இந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் பொழுது, "எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது. புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். இதனால் பாதுகாப்புக்கு இருந்த மத்திய பாதுகாப்பு படை சென்றது. ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. என் பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.


கவர்னர் மாளிகை எதிரே உள்ளது பொதுமக்களுக்கான சாலை. அதனால் தான் திறந்துள்ளோம். எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கும்படி கூறிவிட்டு, இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன்" என்றார். குறிப்பாக இறுதியில் அவர் கூறும் பொழுது எந்த ஒரு பிரச்சனை என்றாலும் என்னிடம் நேரில் வந்து தங்கள் பேசலாம். புதுச்சேரியில் தற்பொழுது ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும். தடுப்புகள் இல்லாததால் இங்கு பெட்ரோல் குண்டு போட்டு விடாதீர்கள்" என்று குறிப்பிட்டு நகைச்சுவையாக கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News