புதுச்சேரி: வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2023-01-24 02:29 GMT

தொடர்ச்சியான வண்ணம் கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்ற அடுக்கு நாட்களை ஒட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளில் எண்ணிக்கையின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகை ஒட்டி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் தற்பொழுது விடுமுறை இல்லாத சமயங்களில் கூட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருகிறது.


பொங்கல் பண்டிகை காரணமாக வெளியூர் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இருப்பினும் உள்ளூர் மக்களால் கடற்கரை களைகட்டியது. மீண்டும் குவிந்தனர். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும், இந்த வாரம் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. வண்ண, வண்ண உடைகளில் ஒயிட் டவுன் பகுதிகளில் அவர்கள் வலம் வந்தனர். அங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்கள். 


கடற்கரையில் இறங்கி அவர்கள் ஆனந்த குளியலில் போட்டனர். அதேபோல் சுண்ணம்பாறு படகு குழாமுக்கு சென்று அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா, கடற்கரை, அருங்காட்சியகம் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சண்டே மார்க்கெட்டிலும் உள்ளூர்வாசிகள், வெளியூர்வாசிகள் கூட்டத்தை காண முடிந்தது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News