புதுச்சேரியில் ஒலிம்பிக் பயிற்சி முகாம் தொடக்க விழா!

Update: 2022-07-10 09:01 GMT

புதுச்சேரி, இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் 19 வயதுக்குட்பட்ட சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கான வாலிபால் மற்றும் கூடைப்பந்து உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் நேஷனல் கோச்சிங் கேம்ப் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் மற்றும் அனிபால் கென்னடி, பெத்தி செமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில் தமிழ்நாடு, புதுவை, பஞ்சாப் ஒடிசா, கர்நாடகா, கேரளா, அரியானா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் அடுத்து வருகின்ற 2023ல் ஆண்டில் ஜெர்மனி நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News