புதுச்சேரி கடற்கரை பகுதியில் வாகனங்கள் நிறுத்த புதிய கட்டுப்பாடு!

Update: 2022-04-12 13:57 GMT

கடற்கரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி முதல் வருகின்ற 16ம் தேதி வரை புதுச்சேரி கடற்கரை பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பாக கடற்கரை திருவிழா ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ் பீச், மணல் குன்று கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனம் நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News