கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பூரணம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

Update: 2021-05-17 13:00 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பூரணம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 7ம் தேதி புதுச்சேரி மாநில முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். இதனையடுத்து 9ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


 



இந்நிலையில், இன்று பூரணம் குணமடைந்த ரங்கசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புதுச்சேரிக்கு திரும்பியுள்ளார். மேலும், அவர் வீடு திரும்பிய சில நாட்கள் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News