ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்படுகிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்!

புதுச்சேரி முதலமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Update: 2022-11-25 03:16 GMT

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் இருந்து வெளியே வந்த அவர் பணியாளர்களுக்கும் பக்தர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார். பின்னர் அவர் கோவில் யானை இடம் ஆசி பெற்றார். பின்னர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேட்டியில் போது கூறுகையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.


ஆளுநரை நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். எனக்கு வேறு சில நிகழ்ச்சிக்காக வெளியே செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தான் பல நேரங்களில் ஆளுநருடன் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அரசு தரப்பில் நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இதனை வைத்து ஆளுநருக்கு எனக்கும் கருத்து வேறுபாடு என்று கூறுகிறார்கள்.


ஆளுநர் உடனான உறவு சுமூகமாகவே உள்ளது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். அவருடன் ஆன உறவு சுகம் சுமூகமாக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து ஆளுநருக்கு கட்சிக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறுகிறார்கள். அவை அனைத்தும் பொய்யான தகவல்கள் தான் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News