விரைவில் பெண்களுக்கு ரூ 1,000 உதவித்தொகை: புதுச்சேரி முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரியில் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

Update: 2022-11-02 02:55 GMT

புதுச்சேரியில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தற்போது அறிவித்திருக்கிறார். ஏற்கனவே தமிழகத்திலும் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் விளங்கப்படுவதாக தி.மு.க அறிவித்து இருந்தது.


ஆனால் தற்போது வரை அந்த திட்டம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அப்பொழுது இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.


இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் மாதம் வழங்குவது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அதே மாதிரி முதியோர் உதவி தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அது தொடர்பாக விண்ணப்பம் செய்ய விரும்புவோர் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News