கோவில் அருகில் அமைந்துள்ள ஒயின் ஷாப்: நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் சாலை மறியல்!

கோவில் அருகில் ஒயின் ஷாப் நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்.

Update: 2022-12-06 11:07 GMT

புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்டதால் கருவடிக்குப்பம், என்ற பகுதி, இங்கு சிந்தனை சுவாமி கோவில் அருகில் உள்ளது சுவாமி பிள்ளை தோட்டம் பகுதியில் புதிய ஒயின்ஷாப் திறக்க காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த ஒயின் ஷாப் சுவாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஒருவரின் இடத்தில் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அதனை அறிந்து கொண்ட சுற்று வட்டார பகுதி மக்கள் நிலத்தின் உரிமையாளரிடம் இந்த ஒயின் ஷாப் திறக்க இடம் தர வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.


மேலும் இங்கு ஒயின்ஷாப் இருந்தால் அதிக பிரச்சனை ஏற்படும் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இடத்தில் உரிமையாளர் அது ஏற்க மறுத்துவிட்டார், இதனால் சாமிபிள்ளை தோட்டம் அணைக்கரை மீது வாஞ்சிநாதன் நகர், இந்திரா நகர், லெனின் நகர், கருணா ஜோதி நகர், கென்னடி கார்டன் உள்ளிட்ட நகர்களை சேர்ந்தோம் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக ஒயின் ஷாப் திறக்க வேண்டாம் என்று இவர்களுடைய போராட்டம் சாலை வரை வந்து இருக்கிறது.


மேலும் அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பகுதியினர் ஒயின்ஷாப் திறக்கப்பட உள்ள இடத்தை முற்றுகைய இட முயன்று இருக்கிறார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடி பிரியர்கள் அதிகம் வரும் மது கடைக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினால் தற்பொழுது நிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் காவல்துறையின் அறிவுறுத்தலின் பெயரில் அவர்கள் போராட்டத்தை பின்பற்றி கைவிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News