புதுச்சேரி : உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நகராட்சி ஊழியர்கள் !

Pondicherry News.

Update: 2021-09-02 09:07 GMT

புதுச்சேரி : 

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி நகராட்சியில் 600-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இதனை தொடந்து அவர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளம், ஓய்வூதியம் வழங்கக்கோரி நேற்று காலை கம்பன் கலையரங்க வளாகத்தில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகம் எதிரே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கன்வீனர் விநாயகவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பத்ரிஷ், ஆனந்த கணபதி, அய்யப்பன், இருசப்பன், உதயகுமார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ThinaThanthi




Tags:    

Similar News