புதுச்சேரி: ரூ.500 மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு!

புதுச்சேரியில் அரசாங்கத்தின் சார்பில் ரூபாய் 500 மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அரசு அதிரடி முடிவு.

Update: 2022-12-23 14:56 GMT

புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் 500 மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் புதுவை அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொடர்பாக எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையின் போது 4 மாத இலவச அரிசிக்கான ரொக்கம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. அது போல தற்போது பொங்கல் பண்டிகளிலும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் குடும்ப பொருள் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணா குமார் மற்றும் பிற அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.


இறுதியாக கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 500 மதிப்பில் பத்து விதமான பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள மூன்று லட்சத்தையும் 37 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு 17 கோடி செலவாகும். அதன்படி பச்சரிசி 2 கிலோ, வெல்லம், துவரம்பருப்பு தல ஒரு கிலோ, கடலைப்பருப்பு, பச்சை பருப்பு, உளுந்தம் பருப்பு அரை கிலோ மஞ்சள் 100 கிராம், முந்திரிப்பருப்பு 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் ஆகிய 10 பத்து பொருட்கள் தொகுப்பில் இடம்பெற இருக்கிறது. இந்த பொருட்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


கடந்த காலங்களில் பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் மூலம் பல தவணைகளில் வழங்கப்பட்டது. 10 பொருட்களும் மொத்தமாக வழங்கப்படாத ஒரு சில பொருட்கள் வாங்க பலர் முன் வரவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் இவற்றை விநியோக்கம் செய்ய மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News