புதுச்சேரியில் 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Update: 2022-01-18 12:24 GMT

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் திருபுத்தல் தேர்வுகள் தற்போது தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தினால் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளை தொடங்கி (ஜனவரி 19) நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு தமிழக அரசை கடைப்பிடித்து ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy:Times Of India

Tags:    

Similar News