புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம்!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

Update: 2022-02-27 08:57 GMT

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலின் பதவிக்காலம் கடந்த 2011ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பெறுவதில் மாநில அரசுக்கு சிக்கல் நீடித்து வந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தேர்தலை நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் மற்றும் வார்டு மறுவரை உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அதிகாரிகளை நியமித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையும் நடத்தி முடித்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Source,Image Courtesy: Daily Thanthi

 

Tags:    

Similar News