புதுச்சேரி: அமைச்சர் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி.!
என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சர்கள் யார் என்பது முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய அமைச்சர் பட்டியலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி மட்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர் இல்லாமல் அரசு 50 நாட்களாக இயங்கி வந்தது.
இதனிடையே, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சர்கள் யார் என்பது முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய அமைச்சர் பட்டியலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
இந்த பட்டியலை உள்துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெறும் வேலையில் ஆளுநர் மாளிகை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்த உடன் புதிய அமைச்சர் பதவி ஏற்கும் என கூறப்படுகிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர், துணை சபாநாயகர் பதவியும், பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவி என முடிவு செய்யப்பட்டுள்ளது.