வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர்: புதுச்சேரியில் பரபரப்பு, என்ன நடந்தது?

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2023-03-28 09:44 GMT

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவா பேட்டை சேர்ந்தவர் தான் ரங்கசாமி என்பவர், இவர் மகன் செந்தில்குமார் என்பவர். பா.ஜ.க பிரமுகராக இருந்து வருகிறார். மேலும் இவர் மங்கலம் தொகுதி பொறுப்பாளராகவும் இருக்கிறார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்டு வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு திடீரென்று வந்து மூன்று மோட்டார் சைக்கிளில் முகமூடி அறிந்த ஒன்பது நபர் கொண்ட குழு வந்து இறங்கியது.


பின்னர் அவர்கள் திடீரென்று தங்கள் கைகளில் இருந்து நாட்டு வெடிகுண்டு செந்தில் குமார் மீது வீசி இருக்கிறார்கள். அந்த குண்டு செந்தில்குமார் அருகில் விழுந்து விடுத்தது. இதனால் சுதாகரித்துக் கொண்ட அவர் தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் மற்றொரு வெடிகுண்டை அவர் மீது வீசியது. எனவே வெடிகுண்டு அவர் மேல் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார்.


பின்னர் அவரை சரமாரியாக சுற்றி வளைத்து அருவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இந்த ஒரு கொலை சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பில் ஏற்படுத்தி இருக்கிறது. தகவல் அறிந்ததும் அமைச்சர் நமச்சிவாயமும் சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்து வந்தார். உடனடியாக கொலையாளிகளை கைது செய்து வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News