புதுச்சேரி : 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் துன்புறுத்தல்.!
புதுச்சேரி : 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் துன்புறுத்தல்.!
புதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வாத்து பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 6 வயது முதல் 14 வயது உள்ள 5 சிறுமிகளை கடந்த 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வாத்து மெய்க்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.
இதனிடையே சிறுமிகள் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டது தொடர்பாக வந்த ரகசிய புகாரை தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் 5 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் அனுமதித்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்தனர்.
அப்போது அந்த சிறுமிகள் தங்களை கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி உள்ளனர் இதனை தொடர்ந்து மருத்துவர்கள் புதுச்சேரி குழந்தைகள் நல ஆனையத்திடம் தகவல் தெரிவித்தனர் பின்னர் குழந்தைகள் நல ஆனையத்தினர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து போலிசார் நடத்திய விசாரணையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து வாத்து பன்னை உரிமையாளர் கன்னியப்பன் அவரின் மகன் ராஜ்குமார் மற்றும் அவரின் உறவினர்கள் சிவா, பசுபதி, அய்யனார் மற்றும் மூர்த்தி ஆகியோரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 நபர்களை தேடி வருகின்றனர்.