புதுச்சேரி: ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை.. பணிகள் தீவிரம்..

Update: 2023-07-21 03:20 GMT

புதுச்சேரியில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் மத்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறது புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கும் பிடித்த ஒரு தளமாக அமைந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை இருக்கும் விதமாக அங்கு சினிமா ஷூட்டிங்களும் நடத்தப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சாலை அமைப்பதற்காக மத்திய அரசு நிதி உதவியுடன், மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து இருக்கிறது.


புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் சாலை வீதி முதல் அதிதி ஓட்டல் வரை ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடி மதிப்பு மிக்க புதிய தார்சாலை அமைப்பதற்காக பூமிபூஜை இன்று நடந்தது. விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் தலைமை தாங்கினார்.


அதுமட்டுமில்லாத இந்த பூமி பூஜையின் போது புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News