புதுச்சேரி தலைமை செயலாளர் திடீர் மாற்றம், ஏன்?

Update: 2022-04-22 02:10 GMT

புதுச்சேரி தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி, தலைமை செயலாளரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் தலைமை செயலாளர் அஸ்வனி குமார் அதிரடியாக டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராஜீவ் வர்மா நியமனம் செய்யப்பட்டார். அதே போன்று பல்வேறு ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News