சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கைது செய்: போராட்டத்தில் குதித்த சிவனடியார்கள்!

Update: 2022-05-04 10:42 GMT

சிதம்பரம் நடராஜர் குறித்து இழிவுபடுத்திய யூடியூபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சுமார் 200க்கும் அதிகமான சிவனடியார்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தி.மு.க. அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த சிவனடியார்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவனடியார்களிடம் போலீசார் சமாதானம் பேசினர். அதன் பின்னரே மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இது தொடர்பாக சிவனடியார்களின் ஒருங்கிணைப்பாளர் பேசும்போது, தமிழகத்தில் சமீப காலமாக இந்து கடவுள்களை இழவு செய்து வருகின்றனர். இது பற்றிய வீடியோக்களை யூடியூப் பக்கங்களில் செய்தியாக வெளியட்டு வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக அரசிடம் புகார் கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மைனர் விஜய் என்பவரை தி.மு.க. அரசு கைது செய்ய வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News