புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகையால் நிரம்பி வழிந்தது!

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புதுச்சேரி திக்குமுக்காடியது.

Update: 2023-01-02 12:28 GMT

புதுச்சேரியில் புத்தாண்டு பிறந்ததையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் திக்கு முக்காடியது. புதுச்சேரிக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை நிரம்பி வழிந்தன. ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையால் முக்கிய சாலைகளில் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆங்கில புத்தாண்டு முடிந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் குறைவாக தெரியவில்லை.


இளைஞர்கள் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி சென்றனர். ஏராளமானோர் குவிந்ததால் கடற்கரை திக்குமுக்காடியது. மேலும் குழந்தைகளுக்கு இன்னும் பதிகளில் கிடைக்காத காரணத்தினால் பெருமளவில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இதன் காரணமாக புதுச்சேரி மிகவும் பரபரப்பாகவே காணப்படுகிறது.


புதுவை கடற்கரைக்கு நேற்று நள்ளிரவில் இளைஞர்கள் ஏராளமானோர் வந்தனர். மேலும் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. புத்தாண்டு பண்டிகை முடிந்த பிறக்கும் கூட பல்வேறு இடங்கள் தற்போது வரை கூட்டம் நெரிசலாகவே காணப்படுகிறது.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News