புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை புதிய ஜனாதிபதி தருவார் - வைத்திலிங்கம் எம்.பி., நம்பிக்கை!

Update: 2022-07-24 12:39 GMT

புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவார் என்று வைத்திலிங்கம் எம்.பி., நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். மேலும், அவர் பொறுப்பேற்ற பின்னர் நல்லாட்சி நடைபெற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு நேரம் ஒரே மாதிரி இருப்பதால் அனைவரும் ஒரே சமயத்தில் செல்லக்கூடிய நிலை இருப்பதால் சாலைகளில் நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை மாற்றியமைக்க முடியுமா? என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இதில் ஆக்கிரமிப்புகளும் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News