முதலமைச்சரிடம் பேசி தலித் அமைப்பின் கோரிக்கை நிறைவேற்றப்படும்: அமைச்சர் சந்திரபிரியங்கா!

Update: 2022-04-16 14:07 GMT

தலித் அமைப்புடைய கோரிக்கைகள் பற்றி முதலமைச்சர் ரங்கசாமியிடம் எடுத்துக்கூறி விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவை தலித் அமைப்பினர் சந்தித்தனர். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதாவது கோயில் பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பூட்டப்பட்டு கிடைக்கிறது. உடனடியாக அதனை பராமரித்து மீண்டும் திறக்கப்பட வேண்டும். மேலும், தலித் மக்களின் வளர்ச்சிக்காக சிறப்புக்கூறு நிதியை செலவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தனர்.

இதனை கேட்டுக்கொண்ட அமைச்சர் சந்திர பிரியங்கா, அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் எடுத்து சொல்லி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News