நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை!

Update: 2022-07-08 11:43 GMT

புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் சுசித்ரா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 5ம் தேதி கந்தவேலு உட்பட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஆலம்பாறை கடல் பகுதியில் கந்தவேலு சென்ற படகின் என்ஜின் திடீரென்று பழுதானது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக படகில் இருந்தவர்கள் புதுச்சேரியில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு வாக்கி டாக்கி மூலமாக தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கடலோர காவல்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை படகுடன் மீட்டு, தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு பத்திரமாக மீட்டு வந்தனர். சக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படைக்கு நன்றியை தெரிவித்தனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News