புதுச்சேரி : வி.சி.க பிரமுகரரை கொலை செய்வதற்காக, ஏரிக்கரையில் வெடிகுண்டுகளுடன் பதுங்கிய 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது !

விசிகவை சேர்ந்த பிரமுகரரை கொலை செய்வதற்காக வில்லியனூர் அருகே உள்ள ஏரிக்கரையில் வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2021-11-14 03:54 GMT

வி.சி.கவை சேர்ந்த பிரமுகரரை கொலை செய்வதற்காக வில்லியனூர் அருகே உள்ள ஏரிக்கரையில் வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் ரவுடி கும்பல் மறைந்திருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எஸ்.ஐ. கீர்த்தி, மற்றும வெங்கடாச்சலம், காவலர்கள் வீரப்பன் உள்ளிட்டோர் குழு கோர்க்காடு ஏரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை பார்த்ததும் அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயற்சி செய்தது. ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்ததில் 5 மட்டும் சிக்கினர். ஒருவர் தப்பியோடிவிட்டார். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சல்மான்கான் 21, ராஜி 18, சிற்றரசு 20 மற்றும் வில்லியனூரை சேர்ந்த வீரபாகு 20, ரவிக்குமார் 21 என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடியவர் பெயர் தனசேகர் என்பதும் தெரியவந்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News