தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.59 லட்சம் மானியம் வழங்கி புதுச்சேரி அரசு உத்தரவு!

Update: 2022-04-13 13:31 GMT

தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 91 ஆயிரத்தை மானியமாக வங்கி கணக்கில் செலுத்தி புதுச்சேரி அரசு அசத்தியுள்ளது.

இது பற்றி புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உற்பத்தி உதவித் தொகையாகவும், உற்பத்திக்கு பிந்தைய மானியமாகவும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் மூலமாக புதுச்சேரியை சேர்ந்த தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 91 ஆயிரத்து 414 மானியமாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News