கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Update: 2021-01-12 09:39 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News