அரியாங்குப்பம்: செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 108ம் ஆண்டு தேர் திருவிழா!

Update: 2022-04-08 01:22 GMT

அரியாங்குப்பம் மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 108ம் ஆண்டு செடல் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News