பள்ளி சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் டிரைவர் அதிரடி கைது!

Update: 2022-02-25 09:03 GMT

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ளது திருவக்கரை என்ற கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பாண்டியன் 26, இவர் ஒரு வேன் டிரைவர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பாண்டியன் மாணவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாணவி தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வேன் டிரைவர் பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Pro Bono Austraila

Tags:    

Similar News