ஏழை மக்களின் சன்டே மார்க்கெட்.. புதுச்சேரியின் ஸ்பெஷல்
ஏழை மக்களின் சன்டே மார்க்கெட்.. புதுச்சேரியின் ஸ்பெஷல்
ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு ஸ்பெஷல் எப்போதுமே இருக்கும். அது போன்று நாம்ம இப்போது பார்க்கின்ற புதுச்சேரிக்கும் உள்ளது. என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம் வாங்க.
கிராமங்களில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். அது போன்று பிரெஞ்சு மக்கள் வாழ்ந்து வந்த நம்ம புதுச்சேரி நகரிலும் வாரச்சந்தை நடைபெறுகிறது. அது எந்த நாளில் நடைபெறும் என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் சன்டே மார்க்கெட் கூடுவது வழக்கம். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்துமே இந்த சந்தையில் கிடைக்கும்.
புதுச்சேரி நகரின் முக்கிய வீதியான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் முழுவதும் நடைபெறுவது வழக்கமாகும். இன்னும் பண்டிகை காலங்களில் இந்த வாரச்சந்தை கலைக்கட்டும் என்றே சொல்லலாம். அது போன்று தற்போது தீபாவளி பண்டிகை நேரத்தில் ஜோராக வியாபாரம் நடைபெறும்.
குறைந்த விலையில், தரமான பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் சன்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
பேன்சி பொருட்கள் தொடங்கி அனைத்துமே இங்கு கிடைக்கிறது. சுருக்கமாக சொல்லணும்னா சன்டே மார்கெட் ஓஎல்எக்ஸ்னு சொல்லலாம்.
ஒரு கஷ்டம்மருக்கு என்ன தேவை என்று கேட்டு ஒவ்வொரு வியாபாரியும் கேட்டு கேட்டு பொருட்களை கொடுப்பார்கள்.
தேவையானதா சொன்னா சட்டுன்னு கற்பூரமா புரிஞ்சுகிட்டு பொருளை எடுத்து கொடுத்திடுவாங்க. சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளும், அதை வாழ்வாதாரமா நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர்.