புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு.!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு.!

Update: 2021-02-18 09:17 GMT

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஜ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்.ஆர்.ரங்கசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள், பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 

Similar News