மாசி மக தீர்த்தவாரி: புதுச்சேரிக்கு வருகை புரிந்த 100 உற்சவ மூர்த்திகள்!

Update: 2022-02-16 07:28 GMT

மாசி மக தீர்த்தவாரி இன்று (பிப்ரவரி 16) நடைபெறுவதை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் புதுச்சேரிக்கு வருகை புரிந்ததை முன்னிட்டு கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாசி மகத்தை முன்னிட்டு வருடம்தோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி விழா நடைபெறும். அதே போன்று இந்த வருடத்திற்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 16) நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எடுத்து வரப்பட்டு வழிப்பாடு நடைபெறுகிறது.

இதனால் வைத்திக்குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி கண்காணிப்பு கேமராவை வைத்து பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News