புதுவையில் புத்தாண்டு கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்!

புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குழுமி புத்தாண்டை வாணவேடிக்கையுடன் வரவேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Update: 2022-01-01 03:01 GMT

புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குழுமி புத்தாண்டை வாணவேடிக்கையுடன் வரவேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை நேற்று நள்ளிரவில் வாண வேடிக்கையுடன் வரவேற்றனர். முதன் முதலாக நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டை வரவேற்றனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா நாட்டினர் வரவேற்றனர்.

அதே போன்று நமது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஒமைக்ரான் வைரஸாக உருமாறி மிரட்டி வருவதால், பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சில யூனியன் பிரதேசமான கோவா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதே போன்று மற்ற இடங்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து புத்தாண்டை கொண்டாடினர். தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News