மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள்!

Update: 2022-05-19 05:00 GMT

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் வைத்துள்ளார். பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சிறப்பான ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பா.ஜ.க. திட்டம் வைத்துள்ளது என்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பிரதமரின் திட்டங்கள் எல்லாவற்றையும் மக்களுக்கு சரிவர தெரியாமல் உள்ளது.

எனவே அது போன்ற திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களிடம் சென்று சேர்க்கின்ற வகையில் 10 நாட்கள் ஆர்வமுடன் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News