புதுச்சேரியில் கொரோனா 3ம் அலை தாக்கலாம்.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை.!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வாராந்திர ஆய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரியில் தற்போது 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.

Update: 2021-07-16 06:20 GMT

புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கக்கூடும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வாராந்திர ஆய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரியில் தற்போது 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.


இதன் காரணமாக எந்த நேரத்திலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கப்படாலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், பொது நல மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறதா என்பதனை மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News