மழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

வங்ககடலில் உருவாகன குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

Update: 2021-11-18 02:52 GMT

வங்ககடலில் உருவாகன குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் இன்று (நவம்பர் 18) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மேற்சொன்ன மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதி கனமழை என்பது 20 செ.மீ.க்கும் மேல் மழை பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்மழை பெய்து வரும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 18) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: 1Newsnation


Tags:    

Similar News