புதுச்சேரி கடற்கரையில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த இளம்பெண்கள்!

Update: 2022-07-25 12:27 GMT

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் என்றாலே வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போன்று நேற்று (ஜூலை 24) விடுமுறை தினம் என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

இதன் காரணமாக தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிந்தது. அதே போல சுற்றுலாவுக்கு வருகை புரிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கடற்கரை பகுதியில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும், சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு புதுவை பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தவாறு இருந்தது. மேலும், வெளிமாநில பதிவு எண் கொண்ட கார்கள் உலா வந்ததை பார்க்க முடிந்தது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News